செவ்வாய், 27 அக்டோபர், 2015

மட்டு மாவட்டத்தில் தொடரும் அடை மழை காரணமாக குளங்களின் வான் கதவுகள் திறக்கப்படும் அபாயம்!

(BNN நிருபர் மயுரன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக உன்னிச்சை மற்றும் உறுகாமம் நீர்பாசன குளங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக உறுகாம நீர்ப்பாசன பிரிவு பொறியியலாளர் க.அகிலன் தெரிவித்தார்.

உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் 21 அடி 7 அங்குலமாகவும், உறுகாமக் குளத்தின் நீர்மட்டம் 15 அடி 8 அங்குலமாகவும் உயர்வடைந்துள்ளது.

உறுகாமம் குளம் தற்போது முழுமையாக நிரம்பிக் காணப்படுவதனால் தொடர்சியாக மழை பெய்யும் சந்தர்ப்பத்தில்; குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

உறுகாமம் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படும் சந்தர்ப்பத்தில் சித்தாண்டி, வந்தாறுமூலை, குமாரவேலியார் கிராமம், முறகொட்டாஞ்சேனை போன்ற பிரதேசங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate