மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களில் 487 மில்லிமீற்றர் மழை வீழ்;ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி எம்.சூரியகுமார் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் இன்று புதன்கிழமை காலை 8.30 மணி வரையே இந்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த
சனிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிவரை 90.7 மில்லிமீற்றரும்
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து திங்கட்கிழமை காலை 8.30 மணிவரை 182.9 மில்லிமீற்றரும்;
திங்கட்கிழமை காலை 8.30 மணியிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிவரை 148.6 மில்லிமீற்றரும்
செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியிலிருந்து 54.8 மில்லிமீற்றரும் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக