செவ்வாய், 27 அக்டோபர், 2015

சீனி உற்பத்தி பணிகள் நிறுத்தம்; கரும்பு செய்கையாளர்கள் கவலை

ஹிங்குறாணை சீனிக் கூட்டுத்தாபனம் சீனி உற்பத்திப் பணிகளை இம்மாதம் (28) ஆம் திகதி நள்ளிரவுடன் நிறுத்தவுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் பிரதிப் பொது முகாமையாளர் தமது பகுதிக் காரியாலயங்களுக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.

இதனால் தற்போது விவசாயிகளினால் மேற்கொள்ளப்பட்ட கரும்பு செய்கையை முற்று முழுதாக அறுவடை செய்து கொள்ள முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

முன்கூட்டியே அறிவிக்கப்படாது திடீரென இவ்வாறு கூட்டுத்தான பணிகளை இடைநிறுத்தம் செய்வதால் விவசாயிகள் கரும்பு அறுவடை செய்வதில் பாரிய சிரமங்களையும் கஷ்டங்களையும் எதிர்கொண்டுள்ளனர்.
மட்டுமல்லாது கரும்புச் செய்கையின் அறுவடை முடிவுறாத நிலையிலேயே கூட்டுத்தாபனம் இவ்வாறான முடிவினை எடுத் துள்ளது.
இவ்வாறு நிறுத்தப்பட்டாலும் மீண்டும் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் சீனி உற்பத்திப் பணிகளை கூட்டுத்தாபனம் மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இடைநிறுத்தம் செய்யப்படும் திகதியை காலம் தாழ்த்துமாறு விவசாயிகள் உரிய அதிகாரிகளை கேட்டுள்ளனர்.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate