வியாழன், 29 அக்டோபர், 2015

மது போதையில் வாகனத்தை செலுத்திய நபருக்கு கடூழிய சிறையும் அபராதமும்

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் மது போதையில் மோட்டார் வாகனத்தை செலுத்திய நபருக்கு களுவாஞ்சிக்குடி நீதிமன்றினால் 02 மாத கடூழிய சிறைத்தண்டனையும் 7000 ரூபா அபராதமும் 08 மாதங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரமும் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

வவுணதீவுப் பகுதியைச் சேர்ந்த நபருக்கே இத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை குறித்த வழக்கு நடைமுறைக்கு எடுக்கப்பட்டபோது மேற்படி நபர் தனது குற்றத்தினை ஒப்புக்கொண்டதையடுத்து களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம். றியாழ் மேற்படி தீர்ப்பினை வழங்கியுள்ளார்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate