புதன், 28 அக்டோபர், 2015

சட்விரோத வியாபாரத்தில் ஈடுபட்ட வார்த்தகர்களுக்கு 5000 ரூபாய் தண்டப்பணம்


நிறைகுறைந்த பாண் விற்பனை செய்த இரு வர்த்தகர்களுக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் தலா 5000 ரூபாய் தண்டப்பணம் அறவிட்டதுடன் முத்திரையிடப்படாத அளத்தல் நிறுத்தல் கருவிகளை கொண்டு வியாபராத்திலீடுபட்ட இரு வர்த்தகர்களுக்கு தலா 2000 ரூபாய் வீதமும் தண்டப்பணம் அறவிட்டுள்ளது. 


அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது 45 வார்த்தக நிலையங்கள் சோதனையிடப்பட்டன. 



மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட இத்ததேடுதலின்போது 4 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டு இவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 



பின்னர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய இவர்களுக்கு நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் இந்த உத்தரவை பிறப்பித்ததாக திணைக்கள மாவட்ட பொறுப்பதிகாரி ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார். 
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate