(சுஜா)
மண்முனை
தென் எருவில் பற்று பிரதேச
சபைக்குட்பட்ட பிரிவிற்குட்பட்ட
தேற்றாத்தீவு பொது நூலகத்தின் வாசகர்
வட்டத்தின் ஏற்பாட்டில் இன்று (26.10.2015) திங்கட்கிழமை நூலகத்தின் மண்டபத்தில் மாபெரும் புத்தக்கண்காட்சி காலை 09.30 மணியளவில் ஆரம்பமாயகியது. இவ் கண்காட்சியினை பிரதம
அதிதியாக கலந்து கொண்ட மண்முனை
தென் எருவில் பற்று பிரதேச
செயலகத்தின் பிரதேச செயலாளர் கலாநிதி
மூ.கோபாலரெத்தினம் அவர்களும் சிறப்பு அதிதியாக கலந்து
கொண்ட மண்முனை தென் எருவில்
பற்று பிரதேச சபை செயலாளர்
யாகேஸ்வரி வசந்தகுமார் அவர்களும் கண்காட்சி கூடத்தினை திறந்து வைத்தனர்.
இவ் கண்காட்சி வாசகர்வட்டத்தின் தலைவர் தெ.கந்தப்பன் அவர்களில்
தலைமையில் விழா ஆரம்பமானது. அந்த
வகையில் தேற்றத்தீவை சேர்ந்த கிழக்கு பல்கலைக்கழக
சிரேஸ்ர உதவி பதிவாளரான வே.நவிதரன் அவர்களில் சார்பாக
அவரின் சகோதரரும் ஸ்ரீ பாத கல்வியற்
கல்லூரி விரிவுரையாளருமான வே.பகிதரன் அவர்கள்
பல்லாயிரம் ரூபா பெறுமதியன பொது
நூலகத்திற்கு அன்பளிப்பு செய்தார், இதனை பிரதேச செயலாளர்
கலாநிதி மூ.கோபாலரெத்தினம் அவர்களிடம்
ஒப்படைக்கப்பட்டது.வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில்
நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மணவர்களுக்கு
பரிசில்களும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயம்.இவ் கண்காட்சியில்
பெருமளவான மாணவமாணவியர் பார்வையிட்டனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக