திங்கள், 12 அக்டோபர், 2015

காத்தான்குடியில் குண்டு வெடிப்பு சம்பவம்: 2 பிள்ளைகளின் தந்தை படுகாயம்

மட்டக்களப்பு- காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ.எல்.எஸ்.மாவத்தையல் இன்று திங்கட்கிழமை மதியம் குண்டு வெடிப்புச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


குறித்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏ.எல்.எஸ்.மாவத்தையில் 58ஆம் இலக்க வீட்டின் அருமையிலுள்ள வெற்று வீடு ஒன்றை கூட்டி துப்புரவு செய்து கொண்டிருந்தபோது குப்பைக்குள்ளிருந்த குண்டே வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 2 பிள்ளைளின் தந்தையான 32 வயதையுடைய எச்.எம்.இர்சாத் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.







Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate