2016ஆம் வருடத்திற்கான அரச மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகளுக்கான கால அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதற்கமைய 2016 ஆம் கல்வியாண்டில் 197 நாட்கள் பாடசாலைகள் நடத்தப்பட வேண்டுமென கல்வி அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எம். பந்துசேன அறிவித்துள்ளார்.
புதிய தவணை விபரம் வருமாறு;
தமிழ், சிங்களப் பாடசாலைகளின் முதலாவது தவணை 2016 ஜனவரி 4 ஆம் திகதி முதல் ஏப்ரல் 8 ஆம் திகதி வரையும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் 25 ஆம் திகதி முதல் ஜூலை 29 வரையும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 31 முதல் டிசம்பர் 2 ஆம் திகதி வரையும் இடம்பெறும்.
முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தவணை 2016 ஜனவரி 4 முதல் ஏப்ரல் 11 ஆம் திகதிவரையும் இரண்டாம் தவணையின் முதலாம் கட்டம் 2016 ஏப்ரல் 18 முதல் ஜூன் 3 வரையும் இரண்டாம் கட்டம் 2016 ஜூலை 7 முதல் 2016 ஆகஸ்ட் 12 வரையும் மூன்றாம் தவணை 2016 ஆகஸ்ட் 22 முதல் டிசம்பர் 2 ஆம் திகதி வரையும் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் பாடசாலைகள் ரம்ழான் விசேட விடுமுறையின் நிமித்தம் ஜூன் 6 ஆம் திகதி முதல் ஜூலை 6 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக