வெள்ளி, 2 அக்டோபர், 2015

உன்னிச்சை மக்களின் குடிநீர் பிரச்சனை சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் நேரில் சென்று ஆராய்வு

தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியினால் மண்முனைமேற்குப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை, நெடியமடுக் கிராமத்தில் வாழும் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அத்தியாவசியத் தேவைகளிலொன்றான குடிநீர் இன்றி பெரிதும் அல்லல்ப்படுகின்றனர்.

இதனால் அவர்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமலும் விவசாயம் சுகாதாரம் கல்வி போன்ற செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன . இதனை அறிந்த

பாராளமன்ற உறுப்பினர் வியாளேந்திரன்  உன்னிச்சை, நெடியமடு கிராமமக்களின் குடிநீர் பிரச்சனை சம்பந்தமாக நேரில் சென்று
பார்வையிட்டு பிரதேச சபையுடனும் அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் தொடர்பு கொண்டு இம்மக்களுக்கான குடிநீர் நீரைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.







Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate