திங்கள், 19 அக்டோபர், 2015

“விடியல் “சமூக வலய இணையத்தளத்தில் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் ஊடக செயலமர்வு

 லியோன் )  
விடியல்” சமூக வலய இணையத்தளத்தில் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் மத்தியில் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எனும்  தொனிப்பொருளில் ஒரு நாள் செயலமர்வு 17,10,2015   மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் இடம்பெற்றது . 

 இந்நிகழ்வுக்கு வளவாளர்களாக ஊடக துறையில் கலாநிதி பட்டம்பெற்ற டாக்டர் . ரங்க கலன்சூரிய ,  சமூக வலய துறை சார்  தொடர்பாடல் நிபுணர் .  இஸ்மாயில் அசிஸ் மற்றும்  தொலைக்காட்சி செய்தி ஒளிப்பதிவு  தொடர்பாடல்  நிபுணர்  பி .நிஹால் மற்றும் ஈஸ்ட் லகூன் ஹோட்டல் உரிமையாளரும்  செல்வராஜா இடம்பெற்ற செயலமர்வில் கிழக்கு மாகாணத்தில்  மூன்று மாவட்டங்களிலும் பிரநிநிதித்துவ படுத்தும் நூற்றுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர் .

இடம்பெற்ற ஊடகவியலாளர் செயலமர்வில்  ஊடகவியலாளர்கள்  ஊடக துறையினை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் , அதே போன்று  ஊடவியலாளர்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளை  எவ்வாறு கையாள வேண்டும் ,  சமூக வலய இணையதளத்தில்  எவ்வகையில் செய்திகள் பதிவேற்றம் செய்ய வேண்டும் போன்ற பல விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டது  .

  விடியல் சமூக வலய இணையத்தளத்தில் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட ஒரு நாள்  ஊடக செயலமர்வில் கலந்துகொண்ட  அனைத்து ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்களும்  நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசில்கள்  வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது  .


























Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate