வியாழன், 22 அக்டோபர், 2015

கள்ளியங்காடு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து

நேற்றய தினம் காலை கள்ளியங்காடு பகுதியில் உள்ள இரும்பு விற்பனை நிலைய களஞ்சியத்தில் மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்ட தீ அனர்த்தம் மட்டக்களப்பு மாநகர சபையின் விரைவு நடவடிக்கையால் உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீ அனர்த்தம் ஏற்பட்ட பகுதியில் இலத்திரனியல் கழிவுப் பொருட்கள் சேமிக்கப்பட்டிருந்ததுடன் காட்போட் மட்டைகள், பிளாஸ்டிக், பழைய இரும்பு, எண்ணெய் பரல் என்பன சேகரிக்கட்டஇடத்தில் இத்தீ அனர்த்தம் இடம்பெற்றது. மாநகர சபையின் 065-22222222 என்ற அவசர இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்திய 5 நிமிடத்தில் தீயணைப்புப்படை குறித்த இடத்திற்கு வருகை தந்ததுடன். தீயை கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்து பாரிய அனர்த்தத்தை தவிர்க்கக்கூடியதாக இருந்தது.

குறித்த இடத்திற்கு முன்னால் வர்த்தக சங்கத் தலைவர் அமிர்தலிங்கம், மாநகர பிரதி ஆணையாளர் ஏன்போர் நேரடியாக விஜயம் செய்திருந்தனர்.









Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate