அம்பாறை மாவட்டம், கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலாளர் கே. லவநாதனை அச்சுறுத்தி வந்த நபர் செவ்வாய்க்கிழமை பிரதேச செயலகத்துக்கு வருகை தந்து நேரடியாக பிரதேச செயலாளரிடம் பகிரங்க மன்னிப்புக் கோரியதை அடுத்து அவருக்கெதிரான பொலிஸ் முறைப்பாட்டை தான் வாபஸ் பெற்றுக் கொண்டதாக பிரதேச செயலாளர் லவநாதன் தெரிவித்தார்.
கல்முனை -01 ஏ கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபையில்; முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றும் சுப்ரமணியம் நாகேந்திரன் என்பவரே சமீப சில நாட்களுக்கு முன்னர் தன்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அச்சுறுத்தல் விடுத்து வந்ததாக பிரதேச செயலாளர் லவநாதன் கல்முனைப் பொலிஸில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் பிரதேச செயலாளரின் முறைப்பாட்டுக்கிணங்க சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்த போது குறித்த நபர் நேரடியாக பிரதேச செயலாளரிடம் மன்னிப்புக் கோரலை முன்வைத்தார்.
எழுத்து மூலமாகவும் நேரடியாகவும் குறித்த நபரிடமிருந்து பகிரங்க மன்னிப்புக் கோரல் கிடைத்த பின்னர் தான் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்திருந்த முறைப்பாட்டை நிபந்தனையின் பேரில் விலக்கிக் கொண்டதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
கல்முனை -01 ஏ கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபையில்; முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றும் சுப்ரமணியம் நாகேந்திரன் என்பவரே சமீப சில நாட்களுக்கு முன்னர் தன்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அச்சுறுத்தல் விடுத்து வந்ததாக பிரதேச செயலாளர் லவநாதன் கல்முனைப் பொலிஸில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் பிரதேச செயலாளரின் முறைப்பாட்டுக்கிணங்க சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்த போது குறித்த நபர் நேரடியாக பிரதேச செயலாளரிடம் மன்னிப்புக் கோரலை முன்வைத்தார்.
எழுத்து மூலமாகவும் நேரடியாகவும் குறித்த நபரிடமிருந்து பகிரங்க மன்னிப்புக் கோரல் கிடைத்த பின்னர் தான் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்திருந்த முறைப்பாட்டை நிபந்தனையின் பேரில் விலக்கிக் கொண்டதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
குறித்த நபர், தனக்கு விடுத்த அச்சுறுத்தலில், இதற்கு முன்னர் கடமையாற்றிய பிரதேச செயலாளரை எவ்வாறு பொம்மை கட்டி எரித்து அனுப்பினோமோ அவ்வாறே தாங்களையும் அனுப்பவேண்டி வரும் என்றும் கடந்த காலங்களில் பிரதேச செயலாளர்கள் எவ்வாறான விபரீதங்களை எதிர்நோக்கினார்களோ அதேபோன்று விபரீதங்களை தாங்களும் எதிர்நோக்கவேண்டி வரும் என்றும் மேற்படி பிரதேச செயலாளரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்ததாகத் தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக