வேலை வாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகளின் உண்ணா விரதப்போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை 7 ஆவது நாளாக தொடர்கிறது.
இந்தநிலையில் மாலை திருகோணமலை மறை மாவட்ட ஆயர் அதி வந்தனைக்குரிய கிரிஸ்டியன் நோயல் இம்மானுவல் மற்றும் ரொமன்கத்தோலிக்க அருட் தந்தையர்களும் குறித்த போராட்டத்தில் ஈடுபடுபவர்களை நேரில் பார்வையிட்டனர்.
பட்டதாரிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன் இந்த விடையம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்துரையாடுவதாகவும் வாக்குறுதி அளித்தனர்.
அரசாங்கத்திடம் இருந்து பதிலை எதிர்பார்த்தவண்ணம் இந்த போராட்டத்தில் ஈடுபடுகின்ற பட்டதாரிகள், தமக்கு சரியான தீர்வு கிடைக்கப்பெறும் வரை இந்த போராட்டத்தினை கைவிடப்போவதில்லையென உறுதியாக தெரிவித்து வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் ஆதரவினையும் எதிர்பார்த்து நிற்கிரனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக