
மட்டக்களப்பு தமிழகத்தின் தென்மேற்குத்திசையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயக்க, நாகர் மன்னர்களால் போற்றி வணங்கப்பட்ட அருடசக்தியாம் அடையல் அமர் அன்னை பத்திரகாளி படுவான்கரைப் பிரதேசத்தில் பெரிய போரதீவின் கண்ணே அமர்ந்து தனக்கெனக் கலைக் கோயில் அமைத்து நல்லாட்சி செய்கிறாள். அவ்வன்னையின் ஆண்டு சக்தி விழா நிகழாண்டு மன்மத வருடம் புரட்டாதித் திங்கள் 30ம் நாள் சனிக்கிழமை 17.10.2015 மாலை 6.00 மணிக்கு அன்னை எழுந்தருளப் பண்ணி திருக்கதவு திறந்து தற்போது மிகவும் மிகவும் விமர்சையாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
எதிர்வரும் 27ம் திகதி காலை 9.00 மணிக்கு நோர்ப்பு நெல்குற்றல் நிகழ்வும் கட்டும் நிகழ்வும் கடற்குளித்தல் நிகழ்வும் இடம்பெறும்.
28.10.2015 அன்று காலை அம்பாளின் தீமிதிப்புடன் அன்னையின் சக்திப் பெருவிழா இனிதே நிறைவு பெறும்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக