ஞாயிறு, 11 அக்டோபர், 2015

“புதுநகரும்,புதுநகர் ஸ்ரீசித்திவிநாயகர் ஆலய வரலாறும்”என்னும் வரலாற்று நூல் வெளியீட்டு நிகழ்வு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புதுநகர் ஸ்ரீசித்தி விநாயகர் ஆலயத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற புதுநகரும்,புதுநகர் ஸ்ரீசித்திவிநாயகர் ஆலய வரலாறும்”என்னும் வரலாற்று நூல் வெளியீட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

புதூர் விக்கினேஸ்வரா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய தலைவர் க.வசந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் ஆகியோர் கலந்துகொண்டனர்.


நிகழ்வில் விசேட அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார்,உதவி ஆணையாளர் நா.தனஞ்செயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செம்மொழி கல்வி மேம்பாட்டு ஒன்றியத்தின் தலைவரும் மண்முனை வடக்கு பிரதேச செயலக சிரேஸ்ட பிரஜைகள் சம்மேளனத்தின் தலைவருமான மு.வாமதேவனின் கைவண்ணத்தில் இந்த நூல் உருவாக்கம் பெற்றுள்ளது.

ஒரு நூற்றாண்டு வரலாற்றிணைக்கொண்ட புதூர் கிராமத்தின் வரலாறு மற்றும் அங்குள்ள வைத்திய முறைகள் மற்றும் கலை,கலாசார பண்பாட்டு விழுமியங்கள், கடந்த காலத்தில் எதிர்நோக்கிய சவால்களைக்கொண்டதாக இந்த நூல் வெளியிட்டுவைக்கப்பட்டுள்ளது.















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate