வியாழன், 1 அக்டோபர், 2015

வேல் கொண்டு தீர்த்தமாடும் போது குருக்கள் உருவேறி மயக்கம் - தேற்றாத்தீவில்(Video)

()சுஜா)
தேற்றாத்தீவு ஸ்ரீ பால முருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின்  தீர்த்த உற்சவம் இன்று(01.10.2015) வியாழக்கிழை காலை 10.00 மணியளவில் நடைபெற்று முடிந்தது. அந்த வகையில் காலை 07.30 மணியளவில் திருப்பொன் சுண்ணம் இடிக்கும் நிகழ்வும் அதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜையும் இடம் பெற்றதைத் தொடர்ந்து. ஸ்ரீ பால முருகன் ஆலயத்தின் தீர்த்தகுளம் ஆகிய வில்லுக்குளப்பொள்கையில் தீர்த்த உற்சவத்திற்காக வேல் கொண்டு புறப்பட்டு வில்லுக்குளப் பொய்கையில் வேலுக்கு அபிஷேகங்கள் இடம் பெற்றது.



தேற்றாத்தீவு பிரதான ஆலயங்களின் பிரதம குருவாகிய ஈசானிய தேசிகர் சிவஸ்ரீ கு.தேவராசா குருக்கள் அவர்கள் வேலுடன் தீர்த்தமாட நீருக்குள் அமிழ்ந்த போது உருவேறிமயங்கம் அடைந்தார் பின்னர் உதவிகுருமார்களின் மந்திர உச்சாடனங்களைத் தொடர்ந்து சுயநிலைக்கு வந்தர் பின்பு குருவிடம் பொது மக்கள் ஆசி பெற்றார்.












Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate