வெளியாகியுள்ள ஐந்தம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தில் 111 மாணவர்கள் சித்திபெற்றுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவித்தர்.
கல்குடா கல்வி வலயத்தில் ஏறாவூர்ப்பற்று 2 கல்விக் கோட்டத்தில் 69 மாணவர்களும், கோறளைப்பற்று கல்விக் கோட்டத்தில் 40 மாணவர்களும் வாகரை கல்விக் கோட்டத்தில் 02 மாணவர்களும் சித்திபெற்றுள்ளனர்.
செங்கலடி மத்திய கல்லூரியில் 25 மாணவர்கள் சித்தி பெற்று வலயத்தில் முதலிடம் பெற்றதுடன் பேத்தாழை சந்திரகாற்தன் வித்தியாலய மாணவன் ஜெகதீசன் தர்ஜீதன் 190 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.
கல்குடா கல்வி வலயத்தைப் பொறுத்தவரை 2013 ஆண்டு 104 மாணவர்கள் சித்தி பெற்றதுடன் 2014 ஆண்டு 105 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர். கடந்த கால பெறபேறுகளுடன் ஒப்பிடும் போது தற்போது மாணவர்கள் சித்தி பெற்றுள்ள வீதம் அதிகரித்துள்ளது.
கல்குடா கல்வி வலய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஆசிரியர்களுக்கும் தமது நன்றிகளைத் தெரிவிப்பதாக அவர் கூறினார்
கல்குடா கல்வி வலயத்தில் ஏறாவூர்ப்பற்று 2 கல்விக் கோட்டத்தில் 69 மாணவர்களும், கோறளைப்பற்று கல்விக் கோட்டத்தில் 40 மாணவர்களும் வாகரை கல்விக் கோட்டத்தில் 02 மாணவர்களும் சித்திபெற்றுள்ளனர்.
செங்கலடி மத்திய கல்லூரியில் 25 மாணவர்கள் சித்தி பெற்று வலயத்தில் முதலிடம் பெற்றதுடன் பேத்தாழை சந்திரகாற்தன் வித்தியாலய மாணவன் ஜெகதீசன் தர்ஜீதன் 190 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.
கல்குடா கல்வி வலயத்தைப் பொறுத்தவரை 2013 ஆண்டு 104 மாணவர்கள் சித்தி பெற்றதுடன் 2014 ஆண்டு 105 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர். கடந்த கால பெறபேறுகளுடன் ஒப்பிடும் போது தற்போது மாணவர்கள் சித்தி பெற்றுள்ள வீதம் அதிகரித்துள்ளது.
கல்குடா கல்வி வலய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஆசிரியர்களுக்கும் தமது நன்றிகளைத் தெரிவிப்பதாக அவர் கூறினார்
0 facebook-blogger:
கருத்துரையிடுக