தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள பிரதீப்மாஸ்டர் உட்பட இருவரையும் விளக்கமறியல் வைக்க கொழும்பு முதன்மை நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிரதீப் மாஸ்டர் என்ற எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, காஜன் மாமா என்று அழைக்கப்படும் கே.ரெங்கசாமி ஆகியோரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிவான் சிஐடிக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பரராஜசிங்கத்தின் கொலையுடன் தொடர்புடைய மேலும் இருவர் சுவிட்ஸர்லாந்தில் இருப்பதால் அவர்களை கைதுசெய்ய இன்டர்போலின் உதவியை நாடவுள்ளதாக சிஐடி நீதிமன்றத்தில் அறிவித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2005ம் ஆண்டு டிசம்பர் 25ம் திகதியன்று ஜோசப் பரராஜசிங்கம் புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
பிரதீப் மாஸ்டர் என்ற எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, காஜன் மாமா என்று அழைக்கப்படும் கே.ரெங்கசாமி ஆகியோரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிவான் சிஐடிக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பரராஜசிங்கத்தின் கொலையுடன் தொடர்புடைய மேலும் இருவர் சுவிட்ஸர்லாந்தில் இருப்பதால் அவர்களை கைதுசெய்ய இன்டர்போலின் உதவியை நாடவுள்ளதாக சிஐடி நீதிமன்றத்தில் அறிவித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2005ம் ஆண்டு டிசம்பர் 25ம் திகதியன்று ஜோசப் பரராஜசிங்கம் புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக