மட்டக்களப்பு சிறைச்சாலையில் 9 தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்துள்ள சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் இன்று(13) செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
நேற்று திங்கட்கிழமை 12ம் திகதி நள்ளிரவு 12மணியளவில் இக்கைதிகள் உண்ணாவிரத போராட்டத்ததை ஆரம்பித்திருந்ததாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவர்களில் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக சில கைதிகளும், நான்கு மற்றும் இரண்டு வருடங்களுக்கு மேலாக மேலும் சில கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தங்களை விடுதலை செய்யுமாறு கோரி இக்கைதிகள், தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடங்களுக்குள்ளேயே சாகும்வரை உண்ணாவிரதத்தை நடாத்தி வருகின்றனர்.
செவ்வாய், 13 அக்டோபர், 2015
Home »
» அரசியல் கைதிகள் 2வது நாளாகவும் சாகும் வரையான உண்ணாவிரதம்
0 facebook-blogger:
கருத்துரையிடுக