வெள்ளி, 23 அக்டோபர், 2015

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 வர்த்தகர்கள் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தில் 40 வர்த்தக நிலையங்கள் இன்று காலை சுற்றி வளைக்கப்பட்டதாகவும் இதன்போது சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட 4 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார். 

காத்தான்குடி பொதுச்சந்தை மற்றும் ஆரையம்பதி நகரங்களில் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

காத்தாதன்குடி பொதுச்சந்தையில் முத்திரையிடப்படாத தராசுகளைக் கொண்டு வியாபாரம் செய்த இரு மீன் வியாபாரிகளும் ஆரையம்பதியில் பழக்கடை மற்றும் ஆயுள்வேத மருந்துக்கடை ஆகியவற்றின் இரு வர்த்தகர்களுமாக நான்கு வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டனர். 

குறித்த நான்கு வர்த்தகர்கள் மீதும் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். 
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate