மட்டக்களப்பு அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தின் 43வது ஆண்டு நிறைவை முன்னிட்டும், உயிர் நீத்த உறவுகளின் ஞாபகர்த்தமாகவும் நடாத்தப்பட்ட மாபெரும் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் இந்த ஆண்டுக்கான சம்பியனாக மகிழடித்தீவு மகிழை விளையாட்டுக்கழகம் தெரிவானது.
மட்டக்களப்பு மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அரசடித்தீவு கிராமத்தின் விக்னேஸ்வரா விளையாட்டு கழகமானது வருடா வருடம் நடாத்தப்பட்டு வருகிற காற்பந்தாட்டச் சமரானது இந்த வருடமும் தனது 43ம் ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் முகமாகவும் கிராமத்தின் உயிர் நீத்த உறவுகளின் ஞாபகார்த்தமாகவும் மாபெரும் காற்பந்தாட்டச் சமரானது அண்மையில் விளையாட்டுக் கழக தலைவர் ச. வேந்தராசர் தலைமையில் சிறப்பான முறையில் இடம் பெற்றது.
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நமசிவாயம் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக வவுணதீவு கோட்ட கோட்டக்கல்வி பணிப்பாளர் த.சோமசுந்தரம்,பட்டிப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.சி. பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
பட்டிப்பளை பிரதேச விளையாட்டு விளையாட்டு உத்தியோகத்தர் திரு. யோகானந்தராசா, பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் தயாசீலன் (உட்பட பலர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
இந்த சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு அம்பாரை மாவட்டத்திலுள்ள பிரதேசங்களில் இருந்து நாற்பத்திரண்டிற்கும் மேற்பட்ட உதைபந்தாட்டக் கழகங்களின் வீரர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இப்போட்டியில் முதலாம் இடத்தினை மகிழடித்தீவு மகிழை விளையாட்டுக்கழகமும்
இரண்டாம் இடத்தினை பனையறுப்பான் கஜமுகா விளையாட்டுக்கழகமும் மூன்றாம் இடத்தினை அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக்கழகமும் வெற்றிபெற்றுக் கொண்டது.
இதன்போது வெற்றி பெற்ற அணிகளுக்கும்,சிறந்த கோல் காப்பாளர், சிறந்த
விளையாட்டு வீரர் ஆகியோருக்கும்அதிதிகளால் வெற்றிக் கிண்ணம் வழங்கி
கௌரவிக்கப்பட்டது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக