
(பத்மராஸ் கதிர்)
இன்று திங்கள்கிழமை(08) காரைதீவு பிரதேச செயலக திவிநெகும பிரிவின் ஏற்பாட்டில் வாழ்வின் எழுச்சி வர்த்தகக் கண்காட்சி காரைதீவு ஆதர வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இவ் வர்த்தகக் கண்காட்சியில் காரைதீவு பிரதேச சமூர்த்திப் பயனாளிகளின் ஆக்கபூர்வமான உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதுடன் பெருந் திரலான மக்கள் ஆர்வத்துடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
கண்காட்சியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதி அரசாங்க அதிபர் எம்.ஐ.அமிர் மற்றும் சிறப்பு அதிதியா அம்பாரை மாவட்ட திவிநெகும பணிப்பாளர் திருமதி. சாந்தரூபன் அனுராதா அவர்கலும் அதிதிகளாக காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி. சிறிகாந்த் சுதர்சினி அவர்களும் காரைதீவு உதவி பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிரிந்தன் அவர்களும் மற்றும் பல அதிதிகளும் கலந்து கொண்டனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக