சனி, 24 அக்டோபர், 2015

அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கோடிஸ்ரன் அவர்களின் பாராளுமன்ற கன்னியுரை

(suren) அம்பாறை மாவட்ட தமிழ் தேசி கூட்டமைப்பின் பாராளுமன்ற
உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்ரன் அவர்களின் பாராளுமன்ற
கன்னியுரையும் அவருக்காக வழங்கப்பட்ட பத்து நிமிடத்துக்குள் அவர்
ஆற்றிய உரையின்  உள்ளடங்கிய விடயங்களும் (2015.10.21)
 கௌரவ சபாநாயகர் அவர்களே, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு
வாக்களித்து மக்களின் சேவைக்காக என்னை இச்சபைக்கு தெரிவுசெய்த
அம்பாரை மாவட்ட தமிழ் மக்களுக்குஎனது மனமார்ந்த நன்றியினைத்
தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

 நல்லாட்சியில் எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி
அவர்களுக்கும்;,நான்காவது தடவையாக பிரதமராக பொறுப்பேற்றிருக்கும்
கௌரவ பிரதமர் அவர்கட்கும் தமிழ் மக்களின் ஏகோபித்த தலைவர்  
கௌரவ இரா.சம்பந்தன் அவர்களுக்கும்,இப்பாராளுமன்றத்திற்கு
தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அனைத்து கௌரவ பாரளுமன்ற
உறுப்பினர்களுக்கும் இச்சபையில் வாழ்த்துக்களை
தெரிவிப்பதற்குகிடைத்திருக்கும் சந்தர்ப்பத்திற்காக  நான்
பெருமையடைகின்றேன்.

 கௌரவ சபாநாயகர் அவர்களே,பெறுமதிமிக்க பல
உயிர்களையும்,உடமைகளையும்பெருளாதாரத்தையும்,வாழ்வாதாரங்களையு
ம்,வாழ்ந்த நிலங்களையும்; இழந்தபோதும் இன்நாட்டில் தங்களின்
அரசியல் அபிலாசைகளையும் உரிமைகளையும் பெற்று நிம்மதியாக வாழ
நினைக்கும் எதிர்பார்ப்புடையமக்களின் ஒரு மக்கள் பிரதிநிதியாக 
இவ்விடத்தில் காணப்படுகின்றேன்.

 பல்லின மக்கள் வாழும்  ஒரு நாட்டில்  அதிகாரப்பகிர்வு என்பது மிகவும்
இன்றியமையாத ஒன்றாகும்.அது இல்லாதவிடத்து அங்கு முரண்பாடுகள்
வித்திடுவது இயல்பே. இனங்களுக்கு இடையில் இனத்துவ
அடையாளங்கள் பேணப்படுவதில் ஏற்படும் குறைபாடுகள்
இனப்பிரச்சினைக்கு மூலகாரணமாக அமைந்துவிடுகின்றது என்பதனை
ஏற்றுக் கொள்ள நாம் முன்;வரவேண்டும்.

 முரண்பாடு எக்கோணத்தில் எழுந்தாலும் அதனை நிராகரிக்கும்
மனப்பாங்கு இந்நாட்டு மக்கள் அனைவரிடத்திலும் தற்பொழுது
உருவாகியுள்ளது. இச்சந்தர்ப்பத்தினை இச்சபை சரிவர பயன்படுத்த
முன்வரவேண்டும்.தமிழ் மக்களின் கலை, கலாசார, பொருளாதார
மூலங்களின் தனித்துவங்களை பாதுகாப்பதற்கு ஏதுவான,
வெளிப்படைத்தன்மையான,

 சமஸ்டி முறையிலான ஓர் அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு அது
சட்டமாக்கபடுமாயின் இனப்பிரச்சினைக்கான தீர்வினை இலகுவில் எட்ட
முடியும்.

 கௌரவ சபாநாயகர் அவர்களே,கடந்த 30 வருட காலமாக தமிழ் மக்கள்
அனுபவித்த இன்னல்களை நாம் அனைவரும் அறிந்ததே. குறிப்பாக
அம்பாரை மாவட்ட தமிழ் மக்கள்அக் கொடிய யுத்தத்தாலும்இயற்கை
அனர்த்தங்களாலும் பாரிய இழப்புக்களை சந்தித்தவர்கள்.

 கடந்த முப்பது  வருடகால யுத்தத்தை பயன்படுத்திஇம் மக்களை மிகவும்
திட்டமிட்ட முறையில் அடிமைக் கூலிகளாக மாற்றும்
வேலைத்திட்டதிற்கு அமைய பாரிய புறக்கணிப்புக்களுக்கு
உட்படுத்தப்பட்டு தங்களின் பாரம்பரிய கிராமங்கள் பலவற்றை தம்
கண்முன்னே இழந்து அடிமைகளாகி நிற்பதனை தங்களின் மேலான
கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.

 மேலும் அம்பாரை மாவட்டத்தில் கடந்தகால யுத்தத்தினைப் பயன்படுத்தி
திட்டமிட்டமுறையில் அபகரித்து பெற்றுக்கொள்ளப்பட்ட  காணிகள்
தொடர்பான ஆய்வு ஒன்றினை மேற்கொள்வதுடன் பல தமிழர்களின்
பூர்விகக் கிராமங்கள் திட்டமிட்ட  அச்சுறுத்தல்களுக்கு மத்தியில்  மக்களை
இடம்பெயரச்செய்து அபகரிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிபெயர்ந்த மக்கள்
மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள பிரதேசங்கள்  சரியான அடிக்கட்டுமான
வசதிகள் வழங்கப்படாது மிகுந்த கஸ்டங்களை அனுபவிக்கின்றனா்
 கடந்த ஐம்பது வருடங்களாக  தமிழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 3000
ஏக்கர் பயிர்செய்கை பண்ணப்பட்டுவந்த நிலங்கள் அந்த நிலங்களுக்கான
காணி உரித்தாவணங்கள் உரிமையாளருக்கு காணப்பட்ட போதும் 2010
லிருந்து வனவள திணைக்கள அதிகாரிகள்  இக்காணி உரிமையாளர்களின்
எந்தவிதமான ஆவணங்களையும் கருத்திற்கொள்ளாமலும்
விவசாயிகளின் பிரச்சினைகளை செவிமடுக்காமலும் இக்காணிகளை
செய்கைபண்ணவிடாமல் தமது எல்லைகளை இட்டு
தடைசெய்துவருகின்றனர் இதனால் தமிழ் மக்களின் பொருளாதாரம்
பின்னடைவதுடன் நாட்டின் பொருளாதாரத்திலும் பாரிய தாக்கத்தினை
ஏற்படுத்தும்

 ஒவ்வொரு தேர்தல் வெற்றியிலும் அநாதரவாக்கப்படும் அம்பாரை
மாவட்ட தமிழ் மக்களுக்குஅரச நிர்வாக அதிகாரம் கூட கிடைத்துவிடக்
கூடாது என்பதில் சிலர் முனைப்பாக இருப்பது அநாகரீகமானதாகும்.
 குறிப்பாக, கல்முனை தமிழ் பிரதேச செயலகப்பிரிவி;ல் சுமார் 30,000க்கும்
அதிகமான தமிழ் மக்கள் வாழ்கின்ற போதும் காணி மற்றும் நிதி
அதிகாரமற்ற ஒரு அர்த்தபுஸ்டியற்ற பிரதேச செயலகத்தினை உருவாக்கி
பாதிக்கப்பட்ட மக்களை அலைச்சல்களுக்கு உட்படுத்துவது பாரிய மனித
உரிமை மீறலாகவே நான் கருதுகின்றேன்.

 இப்பிரதேச செயலகத்தினை உடனடியாக தரமுயர்த்தி சகல அரச
சேவைகளும் இம் மக்களுக்கு தடையின்றி கிடைப்பதனை உறுதிப்படுத்த
வேண்டுமென கௌரவ பிரதமர் அவர்களின்  மேலான கவனத்திற்கு
கொண்டுவருகின்றேன்.

 கல்முனை  நகர அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் கல்முனை
நகரை அண்டிவாழும் மக்களின் குடியிருப்புக் காணிகளும், தமிழர்களின்
எஞ்சியுள்ள விவசாய நிலங்களும் இயற்ககையான வடிகான்களும்,
நீர்நிலைகளும் சூறையாடப்பட்டு இயற்கையின் சமனிலையை மாற்றி ஒரு
சிலரை திருப்திப்படுத்த மேற்கொள்ளப்படும் செயற்திட்டத்தினை நான்
வன்மையாகக் கண்டிப்பதுடன் சரியானதொரு அரச நிர்வாகம் இன்றி
அநாதையாக நிற்கும் கல்முனை தமிழ் பிரதேச செயலகப்பரிவினை
தரமுயர்த்தி வழங்குமாறு மீண்டும் இச்சபையினூடாக கௌரவ பிரதமர்
அவர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.அதன் பின்னர் மேற்கொள்ளப்படும்
நகர அபிவிருத்தித் திட்டத்தில் அப்பிரதேசத்தல் வாழும் மூவின மக்கள்
சார்பான பொதுவான ஒரு நிபுணர்கள் குழுஅமைக்கப்பட்டு 
அத்திட்டத்தினை வெற்றிகரமாக அமுல்படுத்த முடியும் என்பதே எனது
கருத்து

 கடந்த மூன்று வருடங்களில் அம்பாரை மாவட்ட தமிழ் பட்டதாரிகள்
பலதரப்பட்ட போட்டிப்பரீட்சைகளில் திறமையின் அடிப்படையில்
சித்தியடைந்தபோதும் கடந்த ஆட்சிக்காலத்தில் மாகாணசபையில்
வழங்கப்பட்ட  வேலைவாய்புக்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளமையை நான்
இச்சபையில் சுட்டிக்காட்ட விரும்புவதுடன் அதனை வன்மையாக
கண்டிக்கின்றேன். இச்செயல் அம்பாரை மவாட்ட தமிழ் மாணவர்களின்
கல்வியினை இடையில் நிறுத்துவதற்கு ஏதுவான காரணமாக
அமைந்துள்ளது  இது பாரிய ஒரு மோசடியாகும் இதனை இச்சபை
முறையான விசாரணைக்கு உட்படுத்தி பாதிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு
உடநடியாக வேலைவாய்ப்பு கிடைக்கச்செய்ய ஆவன செய்யுமாறு
கேட்டுக்கொள்கின்றேன. பட்டதாரி நியமனங்கள் தொடர்பில் முதலில்
சரியான முறைமை ஒன்று வெளிப்படைத்தன்மையாக உருவாக்கப்பட்டு
அவர்களுக்கான நியமனங்கள் கிடைப்பதனை உறுதிப்படுத்தவேண்டும்.
 மேலும் உயர்தொழில்நுட்பக்கல்லூரிகளில் 46/90 அரச  சுற்றுநிருபத்திற்கு
இணங்க வணிகமானிப்பட்திற்கு(B.COM ) சமனான கல்வித்தகைமை
எனக் குறிப்பிட்டு ஒவ்வொரு வருடமும் வர்த்தகமானியில்
விண்ணப்பங்கள் கோரப்பட்டு மேற்கொள்ளப்படும் உயர் தேசிய கணக்கியல்
டிப்ளோமா (HNDA) பட்டதாரிகளை அமைச்சரவை கூட்ட முடிவினைக்
கொண்டு 10/2014 இல சுற்றுநிருபத்தின் மூலம்  நிறுத்தியிருப்பது இந்த
மாணவர்களை நடுஆற்றில் நிறுத்தியதற்கு சமனாகும்.இவர்களையும்
பட்டதாரி நியமனங்களில் உள்ளடக்கவேண்டும் என்பதனை இவ்விடத்தில்
வலியுறுத்த விரும்புக்கின்றேன்.

 கௌரவ சபாநாயகர் அவர்களே, அம்பாரை மாவட்டத்தின் நான்கு தேர்தல்
தொகுதியிலும் சுமார் 52 தமிழ் கிராமங்கள்
காணப்படுகின்றன.இக்கிராமங்களின் சமூக, பொருளாதார, அபிவிருத்திக்கு
கடந்த காலத்தில் நிதி செலவிடப்பட்ட விகிதம் மிகவும்
பாரபட்சமானதாகவே அமைந்துள்ளது, இந்நிலமை எதிர்காலத்தில்
ஏற்பபடாத வண்ணம் சிறந்த பொறிமுறைகளை மாவட்ட அபிவிருத்தி
நடைமுறையில் உள்வாங்குவதற்கு இச்சபை நடவடிக்கை
எடுக்கவேண்டுமென கேட்டுக்;கொள்கின்றேன்.

 எனது மாவட்டத்தில் யுத்தம்காரணமாக பாதிக்கப்ட்டு காணப்படும் தமிழ் 
குடும்பங்கள் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் விசேட
தேவையுடையோர் போன்றவர்களின் வாழ்வாதாரங்ளை
மேம்படுத்;துவதிற்கு ஏதுவான பாரிய சர்வதேச செயற்திட்டமொன்றினை
அங்கிகரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

 அரசியல் கைதிகளாக பல வருடங்களாக சிறையில் வாடும் எமது சகோதர
சகோதரிகளின் விடுதலையைக் கருத்திற்கொண்டு கௌரவ ஜனாதிபதி
எடுத்திருக்கும் முயற்சி வெற்றிபெறவேண்டும். எந்தவிதமான
வழக்குகளும் இன்றியும் பொய்யான வழக்குகளுடனும் 
சிறைச்சாலைகளில் இவர்கள் அடைத்து வைக்கவேண்டிய தேவை
இல்லை.  இவர்களின் குடும்பத்தினரும், அரசில் கைதிகளும் மிகவும்
மனவேதனையில் காணப்படுகின்றனர் ஜனாதிபதி தமது ஆளுமையையும்,
அதிகாரங்களையும் பயன்படுத்தி கருணைகூர்ந்து பொதுமன்னிப்பு
வழங்கவேண்;டியது காலத்தின் காட்டாயமாகக் காணப்படுகின்றது.

 ஆரம்பகாலத்தில் அம்பாரை மாவட்ட தமிழ் பிரதேசங்களில் மீன்பிடி
வெற்றிகரமாக காணப்பட்டது.இன்று அம் மீனவர்கள் எதிர்நோக்கியிருக்கும்
பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்குதகுந்த நிவாரணங்களை வழங்கி
தடையின்றி வாழ்வதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்
எனவும் இச்சபையை கேட்டுக்கொள்கின்றேன்

 மேலும் எமது பிரதேசத்தில் காணப்படும் பல்லாயிரக்கணக்கான தரிசு
நிலங்களை விளை நிலங்களாக மாற்ற சேனநாயக்க சமூத்திரத்தின்
வலதுகை வாய்க்காலினை சீர் செய்து சாகாமம், றூபஸ், கஞசிகுடியாறு
போன்ற  பிரதான  குளங்களுக்கு நீர்வழங்கிஎமது விவசாயிகளின்
நல்வாழ்வில் பங்குதாரர் ஆகுங்கள் என இச்சபையினை வேண்டுவதுடன்,

 கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகங்களின் ஒட்டுமொத்த
ஆதரவினை தனித்துவமாக பெற்று அதிமேதகு மைத்திரிபால சிறிசேன
அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்று கொண்டதன்  பின்பு நடைபெற்ற
பாராளுமண்ற தேர்தலில் நீண்ட கால அரசியல் கொண்ட போக்குடைய ஒரு
பிரதமரையும் இந்த பாராளுமண்றம் கொண்டுள்ளமை காலத்தின் கட்டாய
நிகழ்வாகும்.எனவே தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை இவ்விரு
தலைவர்களும் எமது தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமைகளுடன் பேசி
விரைவான தீர்வை தமிழ் மக்களுக்கு பெற்று தருவீர்கள் என  தனது
கன்னியுரையினை நிறைவுசெய்தார்
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate