சனி, 10 அக்டோபர், 2015

மண்டூர் –வெல்லாவெளி பிரதான வீதி இன்று இரவு மூடப்படுகின்றது

மட்டக்களப்பின் படுவான்கரையினை ஊடறுத்துச்செல்லும் மட்டக்களப்பு –அம்பாறை பிரதான வீதியில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதன் காரணமாக மண்டூர் –வெல்லாவெளி பிரதான வீதிஇன்று சனிக்கிழமை இரவு 08மணி தொடக்கம் நாளை காலை 6.00மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெல்லாவெளி பிரதேசம் ஊடாக ஊடறுத்துச்செல்லும் மட்டக்களப்பு –அம்பாறை பிரதான வீதியில் மண்டூர் பகுதியில் உள்ள பாலம் புனரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

வீதி அபிவிருத்தி திணைக்களம் ஊடாக இந்த பாலம் புனரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இதன் காரணமாக இன்று இரவு 8.00தொடக்கம் நாளை காலை 6.00மணி வரை பாலம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.








Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate