சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் நன்னடத்தைப் பிரிவினரால் ஏற்பாடுசெய்யப்பட்ட நிகழ்வுகள் நேற்றய தினமும் இன்றும் வாழைச்சேனையில் இடம்பெற்றது. நேற்றய தினம் மருத்துவ முகாம் இடம்பெற்றது. இன்று சிறுவர்களின் கைவண்ணங்கள் ஆக்கங்கள் என்பன இடம்பெற்றது. வாழைச்சேனை சிறுவர் நன்னடத்தை பொறுப்பதிகாரி எஸ்.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட நீதிபதி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்களும், பிரதேச செயலாளர் அவர்களும், சிறப்பு விருந்தினராக வைத்திய அத்தியட்சகர் திரு தட்சணாமூர்த்தி அவர்களும், விசேட அதிதியாக சிரேஸ்ட சிறுவர் நன்னடத்தை பொறுப்பதிகாரி திரு நயுமுடீன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இங்கு சிறுவர்களின் கைவண்ணமும் பார்ப்பவர்களைக் கவர்ந்தமை குறிப்பிடத்தக்கது. அதிதிகளால் சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டது
0 facebook-blogger:
கருத்துரையிடுக