வியாழன், 1 அக்டோபர், 2015

சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து மட்டக்களப்பு பாடசாலை மாணவர்கள்,முன்பள்ளிகள் ஆர்ப்பாட்டம்

பாலியல் துஸ்பிரயோகத்திற்கு கடும் தண்டனைகளை அமுல்படுத்துமாறு கோரியும் துஸ்பிரயோகத்தில் இருந்து சிறுவர்களை பாதுகாக்குமாறு கோரியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களினாலும் முன்பள்ளிகளினாலும் கவன ஈர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள்,முன்பள்ளிகளில் இந்த நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை காலை இந்த கவன ஈர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு,கறுவப்பங்கேணி விபுலானந்தா கல்லூரி மாணவர்கள் மாபெரும் விழிப்புணர்வு பேரணியை இன்று காலை முன்னெடுத்தனர்.

பாடசாலையில் இருந்து ஆரம்பமாகி திருமலை மட்டக்களப்பு வீதியூடாக சென்று செல்வநாயகம் வீதியூடாக இந்த பேரணி பாடசாலையினை வந்தடைந்தது.
இதன்போது சிறுவர்கள்,பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு அதிக பட்ச தண்டனையை வலியுறுத்தியும் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு எதிராகவும் மாணவர்கள் கோசங்களை எழுப்பினர்.

நேற்று வித்தியா, இன்று சேயா,நாளை நாங்களாக இருக்கலாம் எங்களை பாதுகாக்க உரியவர்கள் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இதன்போது மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதேநேரம் சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சிறுவர்களை பாதுகாக்க கோரியும் மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி மாணவர்கள் கவன ஈர்ப்பு ஊர்வலங்களை நடாத்தினர்.

மட்டக்களப்பு தாண்டவன்வெளி பீயுட்ச மைன்ட் முன்பள்ளியினர் மட்டு-திருமலை வீதியில் கவன ஈர்ப்பு ஊர்வலகத்தினை நடாத்தினர்.

இதன்போது மாணவர்கள்,பெற்றோர் என பெருமளவானோர் கலந்துகொண்டதுடன் மாணவர்கள் பல்வேறு சுலோகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

இதேபோன்று நாவற்குடா பரி மரியால் முன்பள்ளி மாணவர்களும் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாவற்குடா தொழில்நுட்ப கல்லூரிக்கு முன்பாக இந்த எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் அதன்போது பல்வேறு கோசங்களையும் எழுப்பினர்.

இதன்போது பாலியல் துஸ்பிரயோகத்திற்கு எதிரான பதாகைகளை ஏந்தி பேரணியிலும் மாணவர்கள்,பெற்றோர் ஈடுபட்டனர். 


































Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate