சிறுவர்களுக்கு எதிரான வன்முறையினை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு வீதி நாடகம் மட்டக்களப்பில் நடாத்தப்பட்டது.
சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு செலான்வங்கி அனுசரணையுடன் இந்த விழிப்புணர்வு வீதி நாடகம் மட்டக்களப்பில் நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பில் மக்கள் அதிகமாக ஒன்று சேரும் பகுதிகளான பொதுச்சந்தை மற்றும் வின்சன்ட் பாடசாலை முன்றிலில் இந்த நாடகங்கள் நடாத்தப்பட்டன..
சமூகத்தில் சிறுவர்கள் எதிர்கொண்டுவரும் சவால்கள் மற்றும் துஸ்பிரயோகங்களினால் பாதிக்கப்படும் சூழ்நிலைகள் தொடர்பில் இந்த வீதி நாடகம் மூலம் மக்களுக்கு விழிப்பூட்டல்கள் வழங்கப்பட்டன.
செலான்வங்கியின் தலைமையகமும் மட்டக்களப்பு செலான் வங்கியும் இணைந்து இந்த நிகழ்வினை நடாத்தியது.
இந்த நிகழ்வில் செலான் வங்கியின் கிழக்கு பிராந்திய முகாமையாளர் சிவஞானி முற்றாதீஸா,மட்டக்களப்பு செலான் வங்கியின் முகாமையாளர் திருமதி பத்மஸ்ரீ இளங்கோ உட்பட செலான் வங்கியின் உத்தியோகத்தர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வானது அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களிலும் இன்று நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு செலான்வங்கி அனுசரணையுடன் இந்த விழிப்புணர்வு வீதி நாடகம் மட்டக்களப்பில் நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பில் மக்கள் அதிகமாக ஒன்று சேரும் பகுதிகளான பொதுச்சந்தை மற்றும் வின்சன்ட் பாடசாலை முன்றிலில் இந்த நாடகங்கள் நடாத்தப்பட்டன..
சமூகத்தில் சிறுவர்கள் எதிர்கொண்டுவரும் சவால்கள் மற்றும் துஸ்பிரயோகங்களினால் பாதிக்கப்படும் சூழ்நிலைகள் தொடர்பில் இந்த வீதி நாடகம் மூலம் மக்களுக்கு விழிப்பூட்டல்கள் வழங்கப்பட்டன.
செலான்வங்கியின் தலைமையகமும் மட்டக்களப்பு செலான் வங்கியும் இணைந்து இந்த நிகழ்வினை நடாத்தியது.
இந்த நிகழ்வில் செலான் வங்கியின் கிழக்கு பிராந்திய முகாமையாளர் சிவஞானி முற்றாதீஸா,மட்டக்களப்பு செலான் வங்கியின் முகாமையாளர் திருமதி பத்மஸ்ரீ இளங்கோ உட்பட செலான் வங்கியின் உத்தியோகத்தர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வானது அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களிலும் இன்று நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக