வித்தியா மற்றும் சேயா போன்ற சிறுமிகளின் படுகொலைகளைக் கண்டித்தும் குற்றவாளிகளுக்கு உடனடி தண்டனை வழக்கப்பட வேண்டும் எனக்கோரியும் காலை செங்கலடியில் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது
சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு செங்கலடி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வார்பாட்ட பேரணியில் கல்லூரி அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கல்லூரி முன்றலில் ஆரம்பமான ஆர்பாட்ட பேரணி வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலயம் வரை சென்று மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வித்தியா மற்றும் சேயாவின் கொலைக் குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும், சிறுவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், பெற்றோர்கள் பிள்ளைகள் விடயத்தில் விழிப்பாக இருங்கள், மாணவர்களை கல்வி கற்க விடுங்கள் என்ற கோசங்களை எழுப்பியவாறு பேரணியாகச் சென்றனர்.
“Stop child abuse”, “Let us live”, “Let’s protect child Rights”, “Stop Child Labour” “Children cannot stop Child abuse, but adult can” , “Stand up against child abuse”, “Call for urgent action for Seya’s Murder”, “Highest Punishment for Seya’s Murderer”, “5 children die every day as a result child abuse” “சிறுவர்களே நாட்டின் எதிர்பாலம் அவர்களைப் பாதுகாப்போம்”, “சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்”, “வித்தியாவை சிதைத்த பாதகரே சேயாவை அழித்த நரகனே எங்கள் குரல் எதிராக என்றுமே” “எமது உறவுகளைப் போல் உணர்வுரீதியாக சிறுவர்களை மதிப்போம்”, “கண்ணியமற்ற கிராதகர்களே சின்னஞ்சிறார்களை சீரழிக்காதீர்கள்”, “சிறுவர் எங்கள் வாழ்கையை சிறுமைப்படுத்தாதீர்கள்”, “சீருடைதரிக்கும் முன்னே சிறுமியை சீரளித்தவனுக்கு தண்டனை வழங்கு”, “சேயாவின் கொலையாழிக்கு அதிகபட்ச தண்டனை கொடு”, “சிறுவர் துஷ்பிரயோகத்தைக் கண்டும் அமைதியாக இருப்பவர்கள் துஷ்பிரயோகம் செய்பவர்களிலும் கொடுமையானவர்கள்”, “பாலகரைப் பாழாக்காதீர்கள் படுகுழியில்தள்ளாதீர்கள்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தயவண்ணம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு செங்கலடி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வார்பாட்ட பேரணியில் கல்லூரி அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கல்லூரி முன்றலில் ஆரம்பமான ஆர்பாட்ட பேரணி வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலயம் வரை சென்று மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வித்தியா மற்றும் சேயாவின் கொலைக் குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும், சிறுவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், பெற்றோர்கள் பிள்ளைகள் விடயத்தில் விழிப்பாக இருங்கள், மாணவர்களை கல்வி கற்க விடுங்கள் என்ற கோசங்களை எழுப்பியவாறு பேரணியாகச் சென்றனர்.
“Stop child abuse”, “Let us live”, “Let’s protect child Rights”, “Stop Child Labour” “Children cannot stop Child abuse, but adult can” , “Stand up against child abuse”, “Call for urgent action for Seya’s Murder”, “Highest Punishment for Seya’s Murderer”, “5 children die every day as a result child abuse” “சிறுவர்களே நாட்டின் எதிர்பாலம் அவர்களைப் பாதுகாப்போம்”, “சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்”, “வித்தியாவை சிதைத்த பாதகரே சேயாவை அழித்த நரகனே எங்கள் குரல் எதிராக என்றுமே” “எமது உறவுகளைப் போல் உணர்வுரீதியாக சிறுவர்களை மதிப்போம்”, “கண்ணியமற்ற கிராதகர்களே சின்னஞ்சிறார்களை சீரழிக்காதீர்கள்”, “சிறுவர் எங்கள் வாழ்கையை சிறுமைப்படுத்தாதீர்கள்”, “சீருடைதரிக்கும் முன்னே சிறுமியை சீரளித்தவனுக்கு தண்டனை வழங்கு”, “சேயாவின் கொலையாழிக்கு அதிகபட்ச தண்டனை கொடு”, “சிறுவர் துஷ்பிரயோகத்தைக் கண்டும் அமைதியாக இருப்பவர்கள் துஷ்பிரயோகம் செய்பவர்களிலும் கொடுமையானவர்கள்”, “பாலகரைப் பாழாக்காதீர்கள் படுகுழியில்தள்ளாதீர்கள்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தயவண்ணம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக