பட்டதாரிகளுக்கு கிழக்கு மாகாணசபையினாலும் மத்திய அரசாங்கத்தினாலும் வேவ்வேறு பரீட்சைகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்த நிலையில் இவ்விரண்டு பரீட்சைகளும் ஒரே தினத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளமையினால் இவ்விரண்டு பரீட்சைகளுக்கு விண்ணப்பித்த பட்டதாரிகள் பெரும் மனக்குளப்ப நிலைக்கு உள்ளாகியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில் கிழக்கு மாகாணசபையினால் விண்ணப்பம் கோரப்பட்ட சமூக சேவை உத்தியோகத்தர் தரம்-2,பதிவாளர் சேவையின் 3ம் நிலை தரம்-2 ஆகிய பரீட்சைகள் இம் மாதம் 31ம் திகதி நடை பெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் இவ்விரண்டு பரீட்சைகளுக்கு தனித்தனியாக பணம் கட்டி பற்றுச் சீட்டினை பெற்ற பட்டதாரி விண்ணப்பதாரிகள் பெரும் மன உலைச்ச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.அத்தோடு சமூக சேவை உத்தியோகத்தர் பதவிக்கான பரீட்சை மார்ச் மாதமும் இப்திவாளர் சேவை பரீட்சை ஜுலை மாதம் நடை பெறவிருப்பதாக பரீட்சாத்திரிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
எனவே இது விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற் கொண்டு இவ்விரண்டு பரீட்சைகளையும் வேவ்வேறு தினங்களில் நடாத்த நடவடிக்கை மேற் கொள்ள வேண்டுமென இரண்ட பரீசைக்கும் விண்ணப்பித்த பட்டதாரிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக