மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இந்த போட்டிகள் நடாத்தப்பட்டன.
இதன் ஆரம்ப நிகழ்வு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உத்தியோகத்தர் ஜே.கலாராணி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதேச உத்தியோகத்தர்கள்,மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த போட்டி நிகழ்வின்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது பேச்சுப்போட்டி,நாட்டியம்,கிராமிய பாடல்கள்,அறிவிப்பாளர் உட்பட பல்வேறு போட்டிகள் நடாத்தப்பட்டது.
இளைஞர்,யுவதிகளுக்கான கலாசார போட்டிகள் விசேட தேவையுடையவர்களுக்கான போட்டிகள்,வாத்தியங்கள் இசைக்கும் போட்டிகள் என மூன்று பிரிவுகளாக இந்த போட்டிகள் நடாத்தப்பட்டன.
0 facebook-blogger:
கருத்துரையிடுக