சனி, 3 அக்டோபர், 2015

சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு முதியவர்கள் பங்குகொண்ட உதைபந்தாட்ட போட்டி

சர்வதேச முதியோர் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் நேற்று வியாழக்கிழமை மாலை நடாத்தப்பட்ட முதியவர்கள் பங்குகொண்ட உதைபந்தாட்ட போட்டி சமநிலையில் முடிவுற்றது.

விளையாட்டுத்துறைக்கு பெரும்பங்காற்றி ஓய்வு நிலையில் உள்ள வீரர்களை கௌரவப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சங்கம் இந்த போட்டியை நடாத்தியது.

மட்டக்களப்பு இந்துகல்லூரி மைதானத்தில் மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் கே.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரும் வைத்திய நிபுணருமான கே.கருணாகரன்,அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.ஈஸ்பரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது முன்னாள் உதைபந்தாட்ட வீரர்கள் இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்டு இந்த உதைபந்தாட்ட போட்டி நடாத்தப்பட்டது.

இந்த போட்டியில் எதுவித கோல்களும் பெறப்படாத நிலையில் போட்டி சமநிலையில் நிறைவுபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பின் வரலாற்றில் முதன்முறையாக முன்னாள் உதைபந்தாட்ட வீரர்களின் போட்டி நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


































Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate