செவ்வாய், 13 அக்டோபர், 2015

கருவேப்பங்கேணி விபுலானந்தா கல்லூரி ஆசிரியர் தின நிகழ்வு

மட்டக்களப்பு- கருவேப்பங்கேணி விபுலானந்தா கல்லூரி ஆசிரியர் தின நிகழ்வு 12.10.2015 திங்கள்கிழமை  காலை 10.30 மணியளவில் கல்லூரி மண்டபத்தில் அதிபர் ஞா .சபேஷ்வரன் தலைமையில் இடம்பெற்றது  .

இந்த நிகழ்வினை  மட்டக்களப்பு  கருவேப்பங்கேணி விபுலானந்தா கல்லூரி மாணவர்கள் ஏற்பாடுசெய்திருந்தனர்.

இடம்பெற்ற ஆசிரியர் தின நிகழ்வில்  மாணவர்களினால் ஆசிரியர்களை நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகளையும்  ஊர்வலமாக மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர் .

அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன்  ஆசிரியர் கீதம் இசைக்கப்பட்டு ஆசிரியர்களுடைய கலை நிகழ்வுகள் இடம்பெற்றது .

இந்நிகழ்வின் போது ஆசிரியர் தினத்தை நினைவு கூறும் முகமாக  நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரினால் கல்லூரி வளாகத்தில் மரக் கன்றும் நாட்டப்பட்டது .

சமூகத்திற்கும்  நாட்டுக்கும்  நற்பிரஜைகளை உருவாக்குவதில் வழிகாட்டியாக இருக்கின்ற  ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது .

இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா .சிறிநேசன் , சிறப்பு அதிதிகளாக  பிரதி வலயக் கல்வி பணிப்பாளர் பி . கோவிந்தராஜா , மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எ .சுகுமாரன் , கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , கல்லூரி ஆசியியர்கள் மற்றும் மாணவர்கள்   ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் 























Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate