மட்டக்களப்பு- கருவேப்பங்கேணி விபுலானந்தா கல்லூரி ஆசிரியர் தின நிகழ்வு 12.10.2015 திங்கள்கிழமை காலை 10.30 மணியளவில் கல்லூரி மண்டபத்தில் அதிபர் ஞா .சபேஷ்வரன் தலைமையில் இடம்பெற்றது .
இந்த நிகழ்வினை மட்டக்களப்பு கருவேப்பங்கேணி விபுலானந்தா கல்லூரி மாணவர்கள் ஏற்பாடுசெய்திருந்தனர்.
இடம்பெற்ற ஆசிரியர் தின நிகழ்வில் மாணவர்களினால் ஆசிரியர்களை நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகளையும் ஊர்வலமாக மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர் .
அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆசிரியர் கீதம் இசைக்கப்பட்டு ஆசிரியர்களுடைய கலை நிகழ்வுகள் இடம்பெற்றது .
இந்நிகழ்வின் போது ஆசிரியர் தினத்தை நினைவு கூறும் முகமாக நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரினால் கல்லூரி வளாகத்தில் மரக் கன்றும் நாட்டப்பட்டது .
சமூகத்திற்கும் நாட்டுக்கும் நற்பிரஜைகளை உருவாக்குவதில் வழிகாட்டியாக இருக்கின்ற ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது .
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா .சிறிநேசன் , சிறப்பு அதிதிகளாக பிரதி வலயக் கல்வி பணிப்பாளர் பி . கோவிந்தராஜா , மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எ .சுகுமாரன் , கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , கல்லூரி ஆசியியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
0 facebook-blogger:
கருத்துரையிடுக