மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை ஏறாவூர் அலிஸாஹிர் மௌலானா சதுக்கத்தில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது.
மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர், உபாலி ஜயசிங்ஹ பொலிஸ். அணிவகுப்பு மரியாதையை ஏற்கொண்டதுடன் பொலிஸாரிடம் பரிசோதனைகளை மேற்கொண்டார்.
ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்ரம, ஏறாவூர் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் உட்பட இன்னும் பல பொலிஸ் அதிகாரிகள் இந்த வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்தனர்.
- See more at: http://athavansrilanka.com/?post_type=post&p=284628#sthash.6BesxnAE.dpuf
0 facebook-blogger:
கருத்துரையிடுக