சனி, 24 அக்டோபர், 2015

கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் மாகாண நீர்ப்பாசன அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் செயற்பாடுகளை துரிதப்படுத்தும் முகமாகவும் அதன் அதிகாரிகளின் செயற்பாடுகள் பற்றி ஆராயும் முகமாகவும் கிழக்கு மாகாண விவசாய, நீர்ப்பாசன அமைச்சருடனான கலந்துரையாடல் நேற்று (23) மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு மாகாண பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் காரியாலய கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண நீர்ப்பாசணப் பணிப்பாளர் திலகராஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய துரைராசசிங்கம், அமைச்சின் செயலாளர் சிவநாதன், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தங்கவேல் மற்றும் நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்கள், அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். 


கிழக்கு மாகாணத்தில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் செயற்பாடுகள் பற்றியும் அதன் அதிகாரிகளின் செயற்பாடுகள் பற்றியும் ஆராயப்பட்டதுடன். திணைக்களத்தின் 2015ம் ஆண்டுக்கான செயற்திட்டங்கள் அமைச்சருக்கு தெளிவு படுது;தப்பட்டதுடன் எதிர்வரும் காலங்களிலான செயற்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இது தொடர்பில் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்கள் எதிர்நோக்கும் பரச்சினைகள் தொடர்பிலும் அவர்கள் அமைச்சருடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.










Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate