2015 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசை நியூட்ரினோ தொடர்பான ஆராய்ச்சிகளுக்காக ஜப்பானின் டகாகி கஜிடா மற்றும் கனடாவின் ஆர்தர் பி.மெக்டொனால்ட் ஆகியோர் வென்றுள்ளனர்.
பிரபஞ்ச உருவாக்கத்தின் அடிப்படை மூலக்கூறு அல்லது அணுத்துகளாகக் கருதப்படும் நியூட்ரினோவின் ஊசலாட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் நியூட்ரினோக்களுக்கு நிறை உண்டு என்பதை இவர்கள் கண்டுபிடித்ததற்காக, இந்த நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் அகாடமியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபஞ்ச உருவாக்கத்தின் அணுக்கோட்பாட்டில் நியூட்ரினோக்கள் பற்றி அதிகம் ஆய்வுகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. ஆனாலும் நியூட்ரினோ என்ற நிகழ்வு ஒரு புரியாத புதிராகவே இன்றும் இருந்து வருகிறது.
பிரபஞ்ச உருவாக்க சக்திகளின் மூலக்கூறு அல்லது அடிப்படைத் துகள்கள் நியூட்ரினோக்கள் என்று அழைக்கப்படுகிறது.
கதிர்வீச்சு அழிவு மூலக்கூறுகளால் நியூட்ரினோக்கள் உருவாகின்றன.
இதுவரை நியூட்ரினோக்களை 3 வகையாகப் பிரித்துள்ளனர். பிரபஞ்சத்தில் பொருட்களின் மிகவும் உள்ளார்ந்த, புலப்படா, செயற்பாடுகள் பற்றிய நமது புரிதலை டகாகி கஜிடா மற்றும் மெக்டொனால்ட் ஆகியோரது கண்டுபிடிப்புகள் மாற்றிவிட்டது என்று நோபல் தெரிவுக்குழு குறிப்பிட்டுள்ளது.
சாதாரண மொழியில் கூற வேண்டுமெனில், நியூட்ரினோக்கள் தங்களது அடையாளங்களை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டவை என்பதும், இந்த உருமாற்றத்திற்கு நியூட்ரினோக்களுக்கு நிறை இருந்தால்தான் இது சாத்தியம் என்பதையும் இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக