வெள்ளி, 9 அக்டோபர், 2015

களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்

மட்டக்களப்பு –கல்முனை பிரதான வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


களுவாஞ்சிகுடி,ஓந்தாச்சிமடம் எல்லைப்பகுதியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் ஓந்தாச்சிமடம் காளிகோவில் வீதியை சேர்ந்த வை.டிலுசன்(20வயது),ஆர்.கோகுலன்(வயது;20)எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்போது முச்சக்கர வண்டி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டியும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.






Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate