தேசிய மரநடுகை தினம் வைபவம் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.
கல்லடி பாலத்தில் அமைந்துள்ள பூங்காவில் இடம்பெற்ற மரநடுகை வைபவத்திற்கு சுற்றாடல் பிரதியமைச்சர் அனுராத ஜெயரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டு மரங்களை நாட்டி வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், மத்திய சுற்றாடல் அதிகார சபை பணிப்பாளர் நாயகம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், மா.நடராசா உட்பட பிரதேச செயலாளர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலர் சமுகமளித்திருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மரநடுகையையொட்டி பல்வேறு இடங்களிலும் வைபவங்கள் நடைபெற்றன.
0 facebook-blogger:
கருத்துரையிடுக