(பத்மராஸ் கதிர்)
இலங்காபுரியின் கிழக்கின்பால் கங்கைகள் களனிகள் சங்கமிக்கும் வங்கக்கடல் ஆர்ப்பரிக்கும் அழகுறும் கல்முனை மாநகரின் மேற்கே வற்றாத வாவியும் வளமிக்க செந்நெல்விளை பூமியும் ஒருங்கே அமைந்த நற்பிட்டிமுனை எனும் பழம்பெரும் பகுதியின் அருகே சேனைக்குடியிருப்புதனில் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவமானது எதிர்வரும் (13-10-2015) செவ்வாய்க்கிழமை நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசராலயத்திலிருந்து திருப்பணிச் சாமான்கள் பழமைப்படி அம்மன் ஆலயத்திற்கு எடுத்துச் சென்று அதனைத்தொடர்ந்து ஆலயத்திலிருந்து கடற்குளிக்கச் சென்று வரும்பொது நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசராலயத்திற்கு சென்று அம்மன் பேழை எடுத்துவந்து மாலை நவராத்திரியுடன் அன்னையின் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி தொடர்ந்து பிற்பகல் 3.00 மணிக்கு பக்தி பூர்வமாக திருச்சடங்கு பூசைகள் இடம்பெறும்.
7ம் திருவிழாவான 19-10-2015 திங்கட்கிழமை ஆயிரக்கணக்கான வாழைக்காய்கள் கொண்ட குலைகள் சடங்கு பூர்வமாக மடுவில் இடப்பட்டு அம்மன் எழுந்தருளிக் கும்பம் சேனைக்குடியிருப்பு கிராம வீதிகளுக்கு செல்லலும் 9ம் திருவிழாவான (21-10-2015) புதன் கிழமை சக்தி பூசையும் 10ம் திருவிழாவான (22-10-2015) வியாழக்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு மதுக்கொடுத்தல்,மடைப்பலி கொடுத்தல்,ஆயுத வழிபாடுடன் ஆலய திருச்சடங்கு பூசைகள் அனைத்தும் சிறப்புற நிறைவடையவுள்ளது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக