2014/2015 ஆம் ஆண்டுக்கான அரச முகாமைத்துவ சேவை சேவையில் இணைத்துக்கொள்வதற்காக நடத்தப்பட்ட திறந்த பரீட்சையில் தெரிவாகிய 2,635 பேருக்கு நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நாளைமறுதினம் (08) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சில் இன்று (6) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வு கொழும்பு, சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தவிர இவ்வருட இறுதிக்குள் முகாமைத்துவ உதவியாளர் சேவையில் 1,061 நியமனங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நியமனக்கடிதங்கள் பெற்றவர்கள் மாவட்ட செயலாளர்களின் கீழ் பயற்றுவிக்கப்படுவார்கள் என அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய மொத்தமாக 3,969 நியமனங்கள் முழுமையாக வழங்கப்பட்ட பின்னர் அரச சேவையின் பல்வேறு அமைச்சுக்கள், திணைக்களங்கள் என்பவற்றில் காணப்படும் 80 வீதமான வெற்றிடங்கள் நிரப்பப்படும் என அவர் தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக