மட்டக்களப்பு கதிரவெளி பிரதேசத்தைச் சேர்ந்த அமரத்துவமடைந்த விநாயகம் கிருபைராசா அவர்களின் ஞாபகார்த்தமாக அன்னாரின் குடும்பத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான நிகழ்வும் விழிப்புணர்வு கருத்தரங்கென்று நேற்று (11) ஞாயிற்றுக்கிழமை கதிரவெளி விக்கினேஸ்வரா வித்தியாலய கேட்போர்கூட மண்டபத்தில் நடைபெற்றது.நடைபெற்ற இரத்ததான ஆரம்ப நிகழ்வாக அமரத்துவமடைந்த அன்னாரின் குடும்பத்தினரால் விளக்கேற்றப்பட்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.இரண்டு பிள்ளைகளின் தந்தையான அமரர் கிருபைராசா கடந்த மாதம் (13.09.2015) ஞாயிற்றுக்கிழமை அன்று புற்றுநோயினால் உயிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.அதனையொட்டி 'வரமுன் காப்போம்' என்ற தொனிபொருளில் நடைபெற்ற மருத்துவ விழிப்புணர்வில் அதிகளவான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது மட்டக்களப்பு இரத்த வங்கி வைத்திய அதிகாரி வைத்தியர் விவேக் உள்ளிட்ட குழும வைத்திய அதிகாரிகள் மற்றும் வாகரை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பலர் வருகைதந்திருந்தனர்.அன்னாரின் ஞாபகார்த்தமாக இரத்த தான நிகழ்வு மற்றும் 'வரமுன் காப்போம்'மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கு என்பனவற்றை அன்னாரின் குடும்பத்தினர் ஒழுங்குபடுத்தி நடத்தியிருந்தனர்.
நடைபெற்ற இரத்ததான நிகழ்வில் கதிரவெளி மற்றும் பல பிரதேசங்களிலும் இருந்து வருகைதந்த நல்லுள்ளம் கொண்ட அனைவரும் தங்களின் இரத்ததானத்தை அன்னாரின் நினைவாக தானம் செய்தனர். இதன்போது 56 பேர் தங்களின் இரத்தத்தை தானமாக வழங்கியுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக