மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாநகரசபையின் அனுசரணையுடன் கவிஞர் ஷெல்லி தாசனின் வண்ண வண்ண பூக்கள் சிறுவர் பாடல் நூல் வெளியீட்டு விழாவும் மட்டக்களப்பின் இளங்கலைஞர் வரதராஜன் இளஞ்செழியனின் நினைவுப் பகிர்வும் நேற்று மாலை நடைபெற்றது.
மட்டக்களப்பு பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் விரிவுரையாளர் கலாநிதி எம்.பி. ரவிச்சந்திரா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தொல்லியல் ஆய்வாளருமான செல்வி க.தங்கேஸ்வரி அதிதியாக கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் இ. ஹரிகரன், மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் இரா. நெடுஞ்செழியன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் மங்கல விளக்கேற்றப்பட்டு அகால மரணத்தினை தழுவிக்கொண்ட மட்டக்களப்பின் இளங்கலைஞர் வரதராஜன் இளஞ்செழியனின் உருவப்படத்துக்கு குறித்த கவிஞனின் பெற்றோரால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கவிஞர் ஷெல்லி தாசனின் வண்ண வண்ண பூக்கள் சிறுவர் பாடல் நூல் வெளியீட்டு விழா இதன் முதல் நிகழ்வாக நடைபெற்றது.
நூல் வெளியீட்டை தொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறை தலைவரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான திருமதி ரூபி வலண்டினா பிரான்சிஸ்னால் நூல் ஆய்வுரை நிகழ்த்தப்பட்டது.
அடுத்த நிகழ்வாக மட்டக்களப்பின் இளங்கலைஞர் வரதராஜன் இளஞ்செழியனின் நினைவுப்பகிர்வினை கவிதையாக சைவப்புலவர் திருமதி சிவானந்தஜோதி ஞானசூரியம் நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் பெருமளவான இலக்கிய ஆர்வலர்கள்,மாணவர்கள்,இலக்கியவாதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் விரிவுரையாளர் கலாநிதி எம்.பி. ரவிச்சந்திரா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தொல்லியல் ஆய்வாளருமான செல்வி க.தங்கேஸ்வரி அதிதியாக கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் இ. ஹரிகரன், மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் இரா. நெடுஞ்செழியன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் மங்கல விளக்கேற்றப்பட்டு அகால மரணத்தினை தழுவிக்கொண்ட மட்டக்களப்பின் இளங்கலைஞர் வரதராஜன் இளஞ்செழியனின் உருவப்படத்துக்கு குறித்த கவிஞனின் பெற்றோரால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கவிஞர் ஷெல்லி தாசனின் வண்ண வண்ண பூக்கள் சிறுவர் பாடல் நூல் வெளியீட்டு விழா இதன் முதல் நிகழ்வாக நடைபெற்றது.
நூல் வெளியீட்டை தொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறை தலைவரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான திருமதி ரூபி வலண்டினா பிரான்சிஸ்னால் நூல் ஆய்வுரை நிகழ்த்தப்பட்டது.
அடுத்த நிகழ்வாக மட்டக்களப்பின் இளங்கலைஞர் வரதராஜன் இளஞ்செழியனின் நினைவுப்பகிர்வினை கவிதையாக சைவப்புலவர் திருமதி சிவானந்தஜோதி ஞானசூரியம் நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் பெருமளவான இலக்கிய ஆர்வலர்கள்,மாணவர்கள்,இலக்கியவாதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக