அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரம்குடா கோப்பக்கரச்சி வயல் பிரதேசத்தில் இருந்து சுமார் 15 கிலோ கிராம் நிலக்கண்ணி வெடி ஒன்று நேற்று 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருக்கோவில் பொலிசார் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கஞ்சிகுடியாறு கோப்பக்கரச்சி தனியார் வயல் காணியில் உழவு இயந்திரம் மூலம் நிலத்தை உழுதுகொண்டிருந்த வேளை இவ் வெடிகுண்டு காணப்பட்டுள்ளது. இதனை அடுத்து திருக்கோவில் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இராணுவத்தினரும், பொலிசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வெடி குண்டை பாதுகாப்பாக மீட்டெடுத் துள்ளனர்.
மீட்கப்பட்ட வெடிகுண்டு, குண்டு செயலிழக்கும் பிரிவினரால் செயலிழக்கச் செய்யப்படவுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக