வெள்ளி, 2 அக்டோபர், 2015

காத்தான்குடி கடற்கரைப் பகுதியில் கடலரிப்பு

மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரைப்பகுதியில் ஏற்பட்டுவரும் கடலரிப்பினால் அப்பகுதியிலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடலரிப்பினால் சுமார் 25 அடி நிலப்பரப்பு கடலுக்குள் சென்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில் கடந்த 10 நாட்களாக தீவிரம் அடைந்துவரும் கடலரிப்பினால் தென்னை மரங்கள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
இதேவேளை கடலரிப்பினால் அப்பகுதியிலுள்ள மீனவர்களின் தங்குமிட கட்டடம்,எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் மீன் வாடிகளும் கடலுக்குள் அடித்துச் செல்லப்படும் அபாய நிலையை எதிர்நோக்கியுள்ளன.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate