மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை மதுபானப்போத்தல்கள் கைப்பற்றப்பட்டதுடன் அதனைக்கொண்டு சென்ற வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை மாலை (08) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
களுவாஞ்சிகுடியிலிருந்து கல்முனைக்கு கார் ஒன்றில் சட்ட விரோதமான முறையில் எடுத்துச் சென்று கொண்டிருந்த மதுபானப் போத்தல்களே இவ்வாறு கைப்பற்றப் பட்டுள்ளன.
258 போத்தல்கள் இதன்போது கைப்பற்றப்பட்டதாகவும் இவற்றுள் காற்போத்தல் 150,அரைப்போத்தல் 48, முழு போத்தல்கள் 60உம் கைப்பற்றப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
களுவாஞ்சிகுடி பொலிசாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே இம்மதுபானப் போத்தல்களும் அவற்றைக் கொண்டுசென்ற காரும் கைப்பற்றப் பட்டுள்ளதோடு இவற்றைக் கொண்டு சென்ற சந்தேக நபரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
களுவாஞ்சிகுடி பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.விஜயசுந்தரவின் தலைமையிலான பொலிஸ் சார்ஜன்களான (44138), ஆதம்பாவா, பந்துல (44294) மற்றும் பொலிஸ கொஸ்தாம்பலகளான, ஆரியவம்ச (35274), அத்தநாயக்க (22478), வெலியங்க (37228) , சந்துருவன் (67160), பண்டார (60211) ஆகிய குழுவினரே இவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்க மற்றும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சிசிரபெத்ததந்திரி, ஆகியோரின் ஆலோசனைகளுக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்டவரை எதிர்வரும் திங்கட்கிழமை களுவாஞ்சிகு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக களுவாஞ்சிகுடி பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.விஜயசுந்தர தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை மாலை (08) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
களுவாஞ்சிகுடியிலிருந்து கல்முனைக்கு கார் ஒன்றில் சட்ட விரோதமான முறையில் எடுத்துச் சென்று கொண்டிருந்த மதுபானப் போத்தல்களே இவ்வாறு கைப்பற்றப் பட்டுள்ளன.
258 போத்தல்கள் இதன்போது கைப்பற்றப்பட்டதாகவும் இவற்றுள் காற்போத்தல் 150,அரைப்போத்தல் 48, முழு போத்தல்கள் 60உம் கைப்பற்றப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
களுவாஞ்சிகுடி பொலிசாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே இம்மதுபானப் போத்தல்களும் அவற்றைக் கொண்டுசென்ற காரும் கைப்பற்றப் பட்டுள்ளதோடு இவற்றைக் கொண்டு சென்ற சந்தேக நபரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
களுவாஞ்சிகுடி பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.விஜயசுந்தரவின் தலைமையிலான பொலிஸ் சார்ஜன்களான (44138), ஆதம்பாவா, பந்துல (44294) மற்றும் பொலிஸ கொஸ்தாம்பலகளான, ஆரியவம்ச (35274), அத்தநாயக்க (22478), வெலியங்க (37228) , சந்துருவன் (67160), பண்டார (60211) ஆகிய குழுவினரே இவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்க மற்றும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சிசிரபெத்ததந்திரி, ஆகியோரின் ஆலோசனைகளுக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்டவரை எதிர்வரும் திங்கட்கிழமை களுவாஞ்சிகு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக களுவாஞ்சிகுடி பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.விஜயசுந்தர தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக