மட்டக்களப்பு கல்லடி,உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலைக்கும் அக்கரைப்பற்று இராமகிருஸ்ண தேசிய பாடசாலைக்கும் இடையில் நடைபெற்ற கிழக்கின் சமர் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் அக்கரைப்பற்று இராம கிருஸ்ண மிசன் தேசிய பாடசாலை வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் விளையாட்டுத்துறையினை ஊக்குவிக்கும் நோக்குடன் சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று இராம கிருஸ்ண மிசன் தேசிய பாடசாலைக்கும் இடையே இந்த உதைபந்தாட்டபோட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
15வயதுக்குட்பட்ட மாணவர்கள் கலந்துகொள்ளும் வருடாந்தம் நடைபெறும் உதைப்பந்தாட்ட போட்டியாக இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு நேற்று சனிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு,கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
சிவானந்தா தேசிய பாடசாலையின் அதிபர் கே.மனோராஜ் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன், திருக்கோவில் வலய கல்விப்பணிப்பாளர் வி.சுகிர்தராஜன் மற்றும் மட்டக்களப்பு வலய உடற்கல்வி பிரதிப்பணிப்பாளர் வி.லவகுமார்,அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்வரன்,மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் செயலாளர் ரி.காந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் எந்தஒரு அணியும் கோல்களைப்பெற்றுக்கொள்ளாத நிலையில் பெனால்ட்டி உதை வழங்கப்பட்ட நிலையில் அக்கரைப்பற்று இராம கிருஸ்ண மிசன் தேசிய பாடசாலை அணியினர் 4-3 என்ற கணக்கில் வெற்றிபெற்றனர்.
இந்த போட்டியின் சிறந்த வீரராக அக்கரைப்பற்று இராம கிருஸ்ண மிசனை சேர்ந்த ரி.தனுராஜ் தெரிவுசெய்யப்பட்டதுடன் சிறந்த கோல் கீப்பராக அக்கரைப்பற்று இராம கிருஸ்ண மிசனை சேர் ஏ.டனுஜன் தெரிவுசெய்யப்பட்டார்.அத்துடன் சிறந்த தாக்குதல் வீரராக சிவானந்தா தேசிய பாடசாலையின் கே.சஞ்சீவன் தெரிவுசெய்யப்பட்டதுடன் சிறந்த கள தடுப்பாளராக அக்கரைப்பற்று இராம கிருஸ்ண மிசனை சேர்ந்த என்.ருக்சான் தெரிவுசெய்யப்பட்டார்.
இதன்போது வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
மாணவர்களின் விளையாட்டுத்துறையினை ஊக்குவிக்கும் நோக்குடன் சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று இராம கிருஸ்ண மிசன் தேசிய பாடசாலைக்கும் இடையே இந்த உதைபந்தாட்டபோட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
15வயதுக்குட்பட்ட மாணவர்கள் கலந்துகொள்ளும் வருடாந்தம் நடைபெறும் உதைப்பந்தாட்ட போட்டியாக இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு நேற்று சனிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு,கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
சிவானந்தா தேசிய பாடசாலையின் அதிபர் கே.மனோராஜ் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன், திருக்கோவில் வலய கல்விப்பணிப்பாளர் வி.சுகிர்தராஜன் மற்றும் மட்டக்களப்பு வலய உடற்கல்வி பிரதிப்பணிப்பாளர் வி.லவகுமார்,அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்வரன்,மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் செயலாளர் ரி.காந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் எந்தஒரு அணியும் கோல்களைப்பெற்றுக்கொள்ளாத நிலையில் பெனால்ட்டி உதை வழங்கப்பட்ட நிலையில் அக்கரைப்பற்று இராம கிருஸ்ண மிசன் தேசிய பாடசாலை அணியினர் 4-3 என்ற கணக்கில் வெற்றிபெற்றனர்.
இந்த போட்டியின் சிறந்த வீரராக அக்கரைப்பற்று இராம கிருஸ்ண மிசனை சேர்ந்த ரி.தனுராஜ் தெரிவுசெய்யப்பட்டதுடன் சிறந்த கோல் கீப்பராக அக்கரைப்பற்று இராம கிருஸ்ண மிசனை சேர் ஏ.டனுஜன் தெரிவுசெய்யப்பட்டார்.அத்துடன் சிறந்த தாக்குதல் வீரராக சிவானந்தா தேசிய பாடசாலையின் கே.சஞ்சீவன் தெரிவுசெய்யப்பட்டதுடன் சிறந்த கள தடுப்பாளராக அக்கரைப்பற்று இராம கிருஸ்ண மிசனை சேர்ந்த என்.ருக்சான் தெரிவுசெய்யப்பட்டார்.
இதன்போது வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
0 facebook-blogger:
கருத்துரையிடுக