மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை வருடா வருடம் நடாத்தும் வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி ஆலய மஹோற்சவ ஆன்மீக பாதயாத்திரையின் இறுதி நாள் யாத்திரை வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தை சென்றடைந்தது.
மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் எல்லையாக இருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு சனிக்கிழமை காலை மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகிய பாத யாத்திரை ஆறு நாட்களாக இடம்பெற்றது.
இப்பாத யாத்திரையானது மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
யாத்திரையில் பேரவை பிரதிநிதிகள், இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் கையில் நந்திக் கொடி ஏந்தியவாறு ஆரோகரா கோசத்துடன் கலந்து கொண்டனர்.
இப்பாத யாத்திரையானது பிரதான வீதி வழியாக உள்ள அனைத்து ஆலயங்களுக்கும் சென்று தரிசனம் செய்யப்பட்டு வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தை வந்தடைந்தது.
ஞாயிறு, 4 அக்டோபர், 2015
Home »
» மட்டக்களப்பு சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் இறுதி நாள் பாத யாத்திரை
0 facebook-blogger:
கருத்துரையிடுக