
கடந்த ஜீலை மாதச் சம்பளம் இரண்டு தடவைகளில் 70 வீதம் வழங்கப்பட்டதுடன், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுமாக இரண்டு மாதத்திற்கான சம்பளமும் 2014ம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான சம்பள நிலுவை உட்பட நான்கு மாத முழுச் சம்பளமும் 30 வீத நிலுவையும் வழங்கப்பட வேண்டிய நிலையிலேயே ஊழியர்கள் கடந்த 18ம் திகதி தொடக்கம் ஆலைக்கு முன்னாள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வந்தனர்.
நாங்கள் எங்களது சம்பள நிலுவையைக் கோரி கடந்த 2015.09.18ம் திகதி தொடக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். ஆனால் எங்களுக்கான எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. கடதாசி ஆலை அமைச்சர் றிஸாட் பதியுதீனின் அமைச்சின் கீழ் வருகின்றது. அமைச்சர் றிஸாட் பதியுதீன் ஊழியர்களாகிய எங்களது சம்பளப் பிரச்சனையை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம் என்று கடதாசி ஆலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக