புதன், 24 ஜூன், 2015

மட்டு.களுதாவளையில் இடம்பெற்ற விபத்தில் தொண்டர் ஆசிரியர்கள் ஐந்து பேர் காயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.


திருகோணமலைக்கு மட்டக்களப்பு மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் ஆளுனரை சந்திக்கச்சென்ற வான் மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதினால் அதில் பயணம் செய்தவர்கள் காயமடைந்துள்ளனர்.

இதன்போது ஐந்து தொண்டர் ஆசிரியர்கள் காயமடைந்துள்ளதுடன் அதில் இரண்டு பேர் சிகிச்சையின் பின்னர் வெளியேறியுள்ளதுடன் மூன்று பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

களுவாஞ்சிகுடியில் இருந்து திருகோணமலைக்கு சென்றுகொண்டிருக்கும்போது களுதாவளையில் வீதியை குறுக்கறுத்த தனியார் பஸ்ஸில் மோதுவதை தவிர்க்கும் வகையில் சாரதி செயற்பட்டதன் காரணமாக மரத்துடன் மோதி வான் விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவ இடத்துக்கு சென்ற களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.





Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate