(நித்தி)
மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஸ்ணு சந்நிதானத்தின் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபன திருவிழாவின் எட்டாம் நாளாகிய நேற்று (26) வெள்ளிக்கிழமை கவுத்தன் குடி மக்களினால் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஸ்ணு சந்நிதானத்தின் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபன திருவிழாவின் எட்டாம் நாளாகிய நேற்று (26) வெள்ளிக்கிழமை கவுத்தன் குடி மக்களினால் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
நடைபெற்ற கவுத்தன் குடி மக்களின் திருவிழாவில் விநாயகப் பெருமானுக்கு விசேட அபிசேக பூசைகள் நடைபெற்றதும் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஸ்ணுவுக்கு அபிசேக பூசைகள் அனைத்தும் மகோற்சவ குருவான ஷப்தரிஷி இந்து குருபீடாதிபதி தேசமான்ய தேசப்பற்று வேதாகம வித்தியாபதி சாஹித்திய பாஸ்கரன் சிவஸ்ரீ குமார விக்கினேஸ்வர குருக்கள் உட்பட ஆலய பிரதம குரு விஸ்ணு பூஜா நவக்கிரக பூஜா துரந்தர் சோதிட இளம் சைவமணி சிவஸ்ரீ சாட்சிநாதன் தெய்வேந்திர குருக்கள் அவர்களினாலும் நடைபெற்றன.
நடைபெற்ற நண்பகல் கொடித்தம்ப அபிசேகம், வசந்த மண்டப பூசை என்பன நடைபெற்றதும் சுவாமி ஆலய உள் வீதி வருகைதந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு வேளை அனைத்து பூசைகளும் நிறைவடைந்ததும்; பிள்ளையார், ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஸ்ணுவும், ஹனுமான் என அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதி உலாவருகைதந்து காட்சியளித்தனர்.
ஆழிமழைக்கண்ணனுக்கு உன்னதமான அற்புத திருவிழாவை வருடாந்தம் நடாத்திவரும் குடிமக்களினால் உற்சவ நாட்களில் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களுக்காக பல்வேறுபட்ட ஒழுங்கமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அத்துடன் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இலங்கா புரியின் ஆழிமழைக்கண்ணனுக்கு உன்னதமான அற்புத பெருவிழாவானது கடந்த வெள்ளிக்கிழமை (19) கொடியேற்றதுடன் ஆரம்பமாகி எதிர்வரும் புதன்கிழமை (01.07.2015) களுவண்கேனி இந்துமா சமுத்திர தீர்தோற்சவத்துடன் இனிதே நிறைவடையவுள்ளமை குறிப்படத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக