வெள்ளி, 19 ஜூன், 2015

ஊறணி பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சங்காபிசேகமும் பால்குட பவனியும்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பிரசித்திபெற்ற ஊறணி பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சங்காபிசேகமும் பால்குட பவனியும் இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.


ஆலயத்தின் கும்பாபிசேக தினத்தின் திதியை அடிப்படையாக கொண்டு வருடாந்தம் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டுவருகின்றது.

இதனையொட்டி இன்று காலை செல்வநாயகம் வீதியில் இருந்து ஆலயம் வரையில் மாபெரும் பால்குட பவனி நடைபெற்றது.

இந்த பால்குட பவனியில் நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டு பால்குடம் ஏந்திவந்தனர்.

ஆலயத்திற்கு பால்குட பவனியானது வந்தடைந்ததும் அடியார்கள் கொண்டுவந்த பால்குடங்கள் மூலமூர்த்தியான அம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து 1008 சங்குகள் கொண்ட மாபெரும் சங்காபிசேக கிரியைகள் நடைபெற்றதுடன் சக்தி மகா யாகமும் நடைபெற்றது.

இதன்போது 1008களினால் அம்பாளுக்கு அபிசேகம் செய்யப்பட்டதுடன் விசேட பூஜைகளும் நடாத்தப்பட்டது.
















Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624950

Translate